காமன் வெல்த் ஊழல் - கல்மாடியிடம் சிபிஐ விசாரணை

டெல்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பாக அதன் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.

காமன்வெல்த் போட்டிகள் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி, கைது செய்துள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தான் சிபிஐ கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து கடந்த ஜனவரியில் கல்மாடியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது இன்று மீண்டும் விசாரித்தது.
Tags: , ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. வழிபோக்கன்
    11 April 2011 at 2:25 am

    இவனை ஓட விட்டு சுட வேண்டும்

Leave a Reply